திருச்சி பிரகடனம் சி.மருது
திருசிராப்பள்ளி பிரகடனம்
முதல் சுதந்திரப் போராட்ட சுநுவாலை வேலூரில் ஏற்பட்டது: முதல்
சிப்பாய்க்கலகம் அங்கேதான்வெடித்தது எனறு சொல்லப்பட்டாலும் அதற்கு முந்தைய புரட்சி என்று திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை சொல்லாம்.
தமிழகத்தில் 1800-1801ம் ஆண்டு நடந்த பரட்சிக்கு தலைமைப் பொறுப்பை சிவகங்கையைச் சேர்ந்த மருது சகோதரர்கள் ஏற்றனர். தம்மைப் போன்று உரிமை, உணர்ச்சி கொண்ட பாளையக்காரர்களையும் ஒருங்கிணைப்பதை மருதுபாண்டியர் முதல்பணியாக செய்து வந்தார்.
ராமநாதபுரத்தில் சேதுபதிகளின் ஆட்சியை புதுப்பிக்க திட்டமிட்டுக் கொண்டிருந்த மேலப்பன், சிங்கம் செட்டி, முத்துக்கருப்பத்தேவர் ஆகியோருடன் தொடர்பு கொண்டார்.
