Thamilaka varalaru

February 5, 2006

இன்றைக்குச் சுமார் எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன், அரப்பா, மொஹஞ்சதாரோ காலத்தில் தமிழர்கள் இமயம் முதல் குமரிவரை ஒரு குடையின் கீழ் ஆண்டு வந்தார்கள் என்பதும் இந்திய துணைக் கண்டம் முழுவதிலும் தமிழர்களே வாழ்ந்தார்கள் என்பதும் வரலாற்று ஆசிரியர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை.

அகழ்வாய்வு வல்லுநர்கள் அரப்பா மொஹஞ்சதாரோவில் தமிழர் பண்பாட்டுச் சின்னங்களே காணக் கிடக்கின்றன, அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்களே என்பதில் ஐயமில்லை. அவை கி.மு.ஐயாயரம் ஆண்டுகட்கு முந்திய கால கட்டத்தைச் சேர்ந்தவை என்று கூறுகின்றனர்.

ஆரியப் படையெடுப்பில் தமிழர்கள் தெற்கே விரட்டப் பட்டனர். வந்தவர்களான ஆரியர்கள் இம்மண்ணில் பிறந்தவர்களான தமிழர்களை எவ்வாறு வெல்ல முடிந்தது? தமிழர்கள் எதனால் தோல்வியுற்றுத் தெற்கு நோக்கி ஓடினர்?

இக்கேள்விகளுக்குப் பதில் வெளிப்படையாகத் தெரிந்ததே!. ஆயினும் யாரும் அதைப்பற்றி எழுதவில்லை. கூறவில்லை.

தமிழர்கள் ஈட்டி, வேல், வாள் முதலிய போர்க் கருவிகளையே பெற்றிருந்தனர். கற்கள் மரங்களையும் பயன் படுத்தியிருக்கலாம் இக்கருவிகளை ஒருவன் ஒன்று தான் எடுத்துச் செல்ல முடியும். எதிராளியை நோக்கி எறிந்துவிட்டால் பிறகு அவ்வீரன் வெறும் கையனாகி விடுவான். களத்தில் கிடக்கும் ஆயுதம் வேறேதாவது கிடைத்தால்தான் உண்டு.

ஆனால் ஆரியர்கள் வில்களையும் அம்புகளையும் பயன் படுத்தினார்கள். ஒரு வில்லாளி பல அம்புகளை எடுத்துச் செல்லமுடியும். அவன் தேரில் செல்பவனாக இருந்தால் ஒரு ஆயுத கிடைங்கையே தன் தேரில் எடுத்துச் செல்லமுடியும்.

அம்புகளில் நஞ்சு தோய்ந்த அம்புகள் உடம்பில் இலேசான கீறலை உண்டாக்கிவிட்டால் கூட எதிரி மரணமடைவான். அத்தகைய நஞ்சு தோய்ந்த அம்புகள், ஒரே அம்பு எய்யப்பட்டவுடன் பலவாகப் பிரிந்து பலபேரைத் தாக்கும் படியாக அமைக்கப்பட்ட அம்புக் கட்டுகள். இப்படிப் பலவகையான அம்புகளைப் பயன்படுத்தும் திறன் பெற்றவர்களாக வில் வீரர்கள் இருந்தார்கள் தவிர அம்போடு அம்பு தொடுத்து பாலம் அல்லது தடுப்புக் கட்டக் கூடிய முறைகளையும் வில் வீரர்கள் கற்றிருந்தார்கள். இத்தகைய போராளிகளுக்கு எதிரே தமிழ்வீரர்கள் நிற்கமுடியாதது வியப்புக்குரிய தன்று.

இராமாயணத்தில் இராமன் ஒருவனாகக் கரதூஷணர்களோடு வந்த ஆயிரக் கணக்கான வீரர்களைக் கொன்று குவித்ததாக ஒருகதை உண்டு. அது பொய் அன்று.

இன்றைக்கு அணு ஆயுத வல்லரசைப் பார்த்து மற்ற அரசுகள் அஞ்சுவதைப் போன்றே அன்றைய தமிழர்கள் ஆரியர்களைக் கண்டு அஞ்சியிருக்க வேண்டும். இராமாயணப் போர்களைப் பற்றிச் சற்று ஊன்றிக் கவனித்தால் இந்த உண்மை புலப்படும்.

ஆரியர்கள் வடக்கே ஒரு நிலையான அரசை அமைத்துக் கொண்டார்கள். தமிழர்கள் தெற்கே ஆண்டார்கள், ஆரியர்கள் தெற்கே வர முடியாதபடி விந்தியமலை ஒரு பெரிய தடையாக இருந்தது.

விந்தியமலைக் காடுகளில் மனிதரை அடித்துத் தின்னக் கூடிய காட்டு மிராண்டிகள் வசித்தார்கள். புராணங்கள் கூறும் அசுரர்கள் அவர்களாகவே இருக்கலாம்.

தமிழர்களை விரட்டி விட்டு ஒரு நிலையான அரசை ஏற்படுத்திக் கொண்டபின் ஆரியர்கள் தமிழர்களின் உயர்ந்த பண்பாடு, கலை, கல்விச் சிறப்பு, மருத்துவம், வாதம், யோகம், ஞானம் முதலியவற்றில் தமிழர்கள் அடைந்திருந்த மேம்பாடு முதலியவற்றை அறிய வாய்ப்பு ஏற்பட்டது. தமிழர்களோடு தொடர்பு கொண்டு அவற்றைக் கற்றுக் கொள்ள விரும்பினர். தங்களில் மிகவும் புத்திசாலியும், மேதாவழியும் சாதுர்யம் கொண்வருமான அகத்திய முனிவரைத் தேர்ந்தெருத்து அனுப்பி வைத்தார்கள். முடிவு

அகத்தியர் மிந்திரா - வருணர்களின் வீரியத்தில் தோன்றி ஒரு குடத்திலிருந்து பிறந்ததாகப் புராணம் கூறும். சுப்பிரமணியரே ‘கும்பமுனியே’ என்று அகத்தியரை அழைக்கிறார்.

காதிலிருந்து (கர்ணன்) மூக்குத் துளைகளிலிருந்து (அசுவினி தேவர்கள்) தொடையிலிருந்து (வேனன்) கடைசியாகக் குடத்திலிருந்து (அகத்தியர்) இப்படியெல்லாம் பிள்ளைகள் உண்டாக்கப் புராணக் கதைகளால் மட்டுமே முடியும் என்பர் சிலர்(இது தான் test tube child).

புராணக் கதைகள் பொய்யானவை என்று சுப்பிரமணியர் கூறிவிட்ட பிறகு அதைப்பற்றி ஆய்வு செய்வது வீண்வேலை. ஆரியரான அகத்தியமுனிவர் தெற்கே வரவேண்டியதற்கான காரணம் எப்படி ஏற்பட்டது என்பதைச் சற்று சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

சிவபெருமான் உமாதேவி திருமண வைபவத்தைக் காண்பதற்காகத் தேவர்கள் ரிஷிகள் அனைவரும் வடக்கே இமயத்தில் வந்து கூடி விட்டதால் வடக்கே தாழந்து விட்டதாகவும் அதைச் சரிப்படுத்த அகத்தியர் ஒருவரே போதும் என்று தெற்கே அனுப்பிவைக்கப்பட்டாதாகவும் கூறும் புராணக்கதை உண்மையாக இருக்க முடியாது. இந்தியா சீனாவில் உள்ள மக்கள் தொகை வடநாடான சைபீரியாவில் ஏற்றம்போல் மேலே தூக்கிக்கொள்ளவில்லை.
( ஒரு காலத்தில் இமயலை கடலடியில் இருந்ததாவும் இந்திய துணைக் கண்டம் ஆஸ்த்திரேலியா வரை பரவி இருந்ததாகவும் இமயமலையில் சங்கு போன்ற வைகள் காணப்படுவதாகவும் கேள்விப்பட்டதாக நினைவு)

எனவே சிவபெருமான் திருமணக்கதையை விட்டு விடுவோம். சித்த மருத்துவ வளர்ச்சிக் குழுவின் ஊறுப்பினரான திரு. கந்தசாமி பிள்ளை அவர்கள் எழுதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ வரலாறு என்ற நூலில் எழுதியுள்ளதை இங்கே எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.

ஆயிர் வேதத்தைத் தொகுத்தவர்களும் அவர்களுக்கு ஆதரவாக விளங்கியவர்களும் தங்களுடைய ஆயுர்வேத மருத்துவ முறையில் சேர்த்துக் கொள்ளத் தக்க விஷயங்களைச் சேகரிப்பதற்காகத் தங்களுடைய ஆட்களைத் தெற்கேயும் கிழுக்கேயும்அனுப்பிவைத்தார்கள் என்பது நன்கு தெரிந்ததே. தமிழர் பாண்பாடு அவர்களுடைய உயர்வான தத்துவக் கொள்கைகள், எல்லாம் வடக்கே வந்து சேர்ந்த ஆரியர்களுக்கு நன்கு தெரிந்திருந்தன. அவற்றைத் தங்கள் பண்பாட்டுடன் சேர்த்து வளமைப்படுத்திக் கொள்வதற்காகத் தங்களில் மிகச் சிறந்த ஒருவரைத் தென்னாட்டுக்கு அனுப்பி வைத்தனர். அப்படி அனுப்பப்பட்டவர் அகஸ்தியர். இந்த உண்மை சிவன் - உமை திருமணக் கதையில் மறைக்கப்பட்டு இருக்கலாம்..

இவ்வாறு கந்தசாமிப் பிள்ளை அவர்கள்எழுதியுள்ளார்

அகத்தியர் முனிஒருவராக வரவில்லை. அவர் தலைமையில் பல ரிஷிகளும் அவர்களின் சீடர்களும் வந்திருக்க வேண்டும் . பின் நிகழ்ச்சிகள்அதையேசுட்டிக் காட்டுகின்றன.

எவ்வாறு நோக்கினும் அகத்தியர் தமிழகத்திற்கு வந்தது அரப்பா மொஹஞ்சதாரோ காரலத்திற்குப் பின்னர்தான். இராமாயண காலத்திற்குச் சற்று முன்னதாக என்று எடுத்துக் கொள்ளலாம்.

விந்திய மலைக் காடுகளில் வாதாபி வில்வலன் என்ற இரண்டு கொடிய அரக்கர்கள் வாழ்ந்தனர். மனிதர்களைத் தந்திரமாக வசப்படுத்திக் கொன்று தின்பதுஅவர்களது தொழில். தங்களில் ஒருவனை ஆடாக மாற்றி அதை வெட்டிக் கொன்று வந்தவனுக்கு உணவு படைப்பான் வில்வலன் அவன் உண்டு முடிந்ததும் “வாதாபி வெளியே வா” என்று அழைத்தால் உணவாக வியற்றுக்குள் சென்றவன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்துவிடுவான். பிறகு இருவருமாக வயிறு கிழிந்து இறந்து கிடப்பவனை அறுத்துத் தின்பார்கள், அப்படி ஒரு வரம் பெற்றிருந்தார்களாம் அவரகள்!( இதை ஒரு திரைப்படத்தில் படத்தில் மாங்கணி யாக காட்டினர் அகத்தியர் பிராமணர் என்பதால்)

வல்வலன் அகத்தியருக்கு விருந்து வைத்தான். அகத்தியர் உண்டு முடித்தபிறகு “வாதாபி வெளியே வா” என்று அழைத்தான். பலமாக ஒரு ஏப்பம் விட்டு விட்டு அகத்டதியர் “வாதாபி சீரணமாகி விட்டானே?” என்றார். (வரம் பலிக்கவில்லை) கோம் கொண்ட வில்வலன் அகத்ததியரைத் தாக்க அகத்தியர் அவன்மேல் பாசுபதாஸ்திரத்தை ஏவ, வில்வலன் அகத்தியருக்கு நிறையப் பொருள் கொடுத்து மன்னிப்புப் பெற்றுச் சென்றான்.

இதிலிருந்து ஆரிய ரிஷிகள் மாமிச உணவை விருமபி உண்டார்கள். மனித இறைச்சியையும் விட்டு வைக்கவில்லை என்று தெரிகிறது.

வாதாபி வில்வலன் சகோரர்கள் விந்திய மலைக்குத் தெற்கே அரசாண்ட மன்னர்களாக இருந்திருக்கவேண்டும்.. அகத்தியர் தன் மனைவி லோபா முத்திரைக்காக வில்வலனிடம் பொருள் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆடாக மாற்றும் கதை வேண்டும் என்றே புளையப் பட்டதாகவும் இருக்கலாம்..

வில்லவன் தவிர, வதுவாதிபராசன், திராவிட பூபதி, கிருதபவன் என்பவர்களும் விந்திய மலைக்குத் தெற்கே அரசாண்ட மன்னர்கள் என்று தெரிகிறது. அகத்தியர் வில்வலனிடமிருந்து அவர்களுக்கும் பொருள் பொற்றுக் கொடுத்தாகக் கூறப்படுகிறது.

அகத்தியர் விந்திய மலையை எப்படிக் கடந்தார் என்டபதைக் கதையாக மட்டுமே கூறப்பட்டுள்ளது. தங்களைத் தெற்கு நோக்கிச் செல்ல விடாத விந்திய மலையை ஆரியர்கள் மிகவும் வெறுத்தனர். விந்தியன் மிகவும் கர்வம் கொண்டு ஆணவத்துடன் நின்றதாகக் கூறினர். இன்னொரு புராணக் கதை விந்தியனுடைய சிறகுகளை சிவபெருமானே வெட்டிவீழ்திதயதாகவும் கூறும்,

சூரிய சந்திரர்கள் கூட மேற்கே போக விடாமல் விந்திய மலை தடுத்துக் கொண்டு நிற்கிறது என்று தேவரகளும் ரிஷிகளும் போய்ச் சிவபெருமானிம் முறையிட்டார்களாம்,. விந்தியமலை எவ்வளவு இடைஞ்சலாக இருந்துள்ளது என்பது இதிலிருந்து புரிகிறதல்லவா?.

அகத்டதியரே முதன் முதலாக விந்தியத்தைக் கடந்து தெற்கே வந்த ஆரியர்,(அவரோடு பலரிஷிகளும் , வீரர்களும் வந்திருக்கவேண்டும்)

அகத்தியர் சிவபெருமானுடைய ஆசியுடனேயே வந்தார் என்பதை மறுக்கமுடியாது. சிவன் மைந்தரான சுப்பிரமணியர் அகத்தியரைச் சீடராக ஏற்றுக் கொண்டது அதை விளக்குகிறது.

தமிழர் கடவுளான சிவபிரான் அகத்தியருக்கு அனுகூலமானது எவ்வாறு?
தமிழர் கடவுளான சிவபிரான் அகத்தியருக்கு அனுகூலமானது எவ்வாறு?

சிவபெருமானும் ஆரியர்களும்

ஆரியர்கள் சிந்து கங்கைச் சமவெளியிலிருந்த தமிழர்களைத் தெற்கு நோக்கி விரட்டி விட்டார்கள். ஆனால் கயிலையில் வசித்த சிவபெருமானிடம் அவர்களுடைய கைவரிசை செல்லவில்லை.பூதகணங்களைப் படைகளாக உடைய சிவபெருமானை நெருங்கவே ஆரியப்படைகள் அஞ்சின.

அதனால் ரிஷிகள் ஒன்று கூடி ஒரு பெரிய யாகம் செய்து அதிலிருந்து கொடிய புலி, யானை,பாம்பு, எரியும் நெருப்பு முதலானவற்றை அனுப்பினார்கள். சிவன் அவற்றை வென்று புலித் தோலை ஆடையாகவும் , பாம்புகளை ஆபரணமாகவும் வடவாக்னியைக் கையிலும் ஏந்தி அடக்கிவிட்டார். ரிஷிகள் கடைசியாக ஏவிய நான்கு வேதங்களையும் காற் சிலம்புகளாக அணிந்து கொண்டார்.

சிவனைத் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று அறிந்த ரிஷிகள் அவரைத் தம் கடவுளாக ஏற்றுக் கொண்டு சமாதானம் செய்து கொண்டனர். ஆரிய மன்னனான தட்சன் தன் பெண்களில் ஒருத்தியாகிய சதியை சிவபொருமானுக்கு மணம் செய்து கொடுத்து உறவேற்படுத்திக் கொண்டான்

சிறிது காலத்திற்குப் பிறகு ஆரியர் நன்கு வேரூன்றிக் கொண்டது என்ற துணிவேற் பட்டவுன் தட்சன் சிவபொருமானை அழிப்பதற்காக ஒரு பெரிய யாகத்திற்கு ஏற்பாடு செய்தான். ஆரியர்களின் கடவுள்கள் எல்லோரும் அதில் கலந்து கொண்டார்கள். அதையறிந்த சதிதேவி துடித்தாள். எப்படியும் அந்த யாகத்தைத் தடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் பறப்பட்டாள்.

தட்சன் தன் மகளை ஏசினான் ,”சுடுகாட்டில் திரிபவளை மணந்து கொண்ட நீ வந்தால் யாக சாலையின் புனிதத் தன்மை கெட்டுப் போய்விட்டது ஓடிப்போய் விடு” என்று விரட்டினான்.

யாகத்தை நிறுத்துவதற்கு வேறு வழியில்லை என்பதை உணர்ந்த தாட்சாயணி யாக குண்டத்தில் விழுந்து தன்னையே அழித்துக் கொண்டாள். யாகம் தடைப்பட்டது.

நடந்ததை அறிந்த சிவபொருமான் மிகவும் கோபம் கொண்டு வீரபத்திரனை அனுப்பினார். வீரபத்திரன் ஆரியர் கடவுள்களை வென்று தட்சன் தலையையும் வெட்டி யாக குண்டத்தில் போட்டுப் பொசுக்கி விட்டார்.

சிவபெருமானைத் தங்களால் வெல்லவே முடியாது என்பதை உணர்ந்த ஆரியர்கள் அவரைப் போற்றித் தொழுது அடியார்காளகி விட்டனர். தங்களுடைய புராணக் கதைகளான மச்சபுராணம் , வராக புராணம், நரசிம்ம புராணம், வாமன புராணம் போன்றவற்றையும் சிவபெருமானுக்கே முதலிட மளிப்பவையாக மாற்றி விட்டார்கள்.

எல்லா மக்களையும் தம் மக்கள் போலவே பாவிக்கும் தமிழ்ப் பண்பால் சிவபெருமான் ஆரியரகளை ஏற்றுக் கொண்டார். ரிஷிகளும் சிவ பக்தர்களாய் மாறி விட்டார்கள். அவர்களால் அகத்தியரை சிவபெருமானுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனாலேயேஅகத்தியரை தென்னாட்டுக்கு அனுப்பி வைத்தார்

இங்கு பேரறிஞர் டி.வி.சாம்பசிவம் பிள்ளை அகராதியிலிந்து சில வரிகளை எடுத்துக் காட்டவிரும்புகிறோம்.

விந்திய பர்வதத்தைச் சுற்றிலும்துங்கபத்திரா நதிக்கு படபாரிசத்திலுள்ள வனாந்தரத்தில் அகஸ்தியர் நுழைந்து வந்ததன் பிறகே ஆரிய மக்கள் தென்னாட்டு எல்லையில் பிரவேசிக்க ஆரம்பித்தார்கள். ஆகவே ஆரியர்கள் அகத்தியரைத் தலைவராக் கொண்டுதான் தமிழ் நாட்டை அடைந்ததாக எண்ணப்படுகிறது. தன்வந்திரி மாணாக்கரென்று கருதப்படும் இவ்வகத்தியர்தான் ஆயுற்வேத்தையும் தென்னாட்டில் புகட்டினார் என்றும் கருதப்படுகிறது.

அகத்தியர் மலைகளைக் கடந்து வந்து கொணடிருக்கும் போதுதான் பறக்கும் விமானத்தின் மூலமாக வந்த இராவணன் அவரைக் கண்டான். விமானத்திலிருந்து இறங்கி வந்து அவர் எதிரே நின்றான். அகத்தியர் தன்னை வணங்காதது அவனுக்கு ஆத்திரத்தை உண்டாக்கிற்று. இரண்டு பேரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை உண்டாயிற்று. இசைப் போரில் அகத்தியர் இராவணனை வென்றார். இராவணன் அகத்தியரை வாழ்த்தி விடை பெற்றுச் சென்றான் இது கதை.

அகத்தியர் மேலும் தெற்கு நோக்கி நடந்து குடகு மலையை அடைந்தார். காவிரி ஆறு உற்பத்தியாகும் அழகான இடத்தைக் கண்டார். அங்கே தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரின் மகளான லோபா முத்திரையை மணம் செய்து கொண்டார். (லோவா முத்திரை புலத்தியரின் தங்கை என்றும் கவேரன் என்பான் மகளாகையால் காவேரி எனப் பெயர் பெற்றாள் என்றும் விதர்ப்ப தேசத்தரசன் பெண் என்றும் பல கதைகள் உண்டு)

ஆரியர்கள் ஆட்சி செய்ய மாட்டார்கள் ஆட்சியாளரை ஆட்டுவிப்பார்கள் மாபெரும் புத்திசாலிகள் கல்வியறிவில் முன்னிலை வகிப்பர் நம்மைவிட இன்றும் திறமையானவர்கள் இதையெல்லாம் மறுக்க முடியாது
அகத்தியர் தன்மனைவியுடன் சிறிது காலம் அங்கே தங்கியிருந்தார். அக்காலத்தில் அவருடன் வந்திருந்த ரிஷிகளும் வீரர்களும் தமிழகத்தில் சென்று அங்குள்ள சூழ்நிலையை அறிந்து வந்தனர். சிவபெருமானால் அனுப்பப்பட்ட முனிவர் தமிழகத்திற்கு வருகிறார் என்றால் தமிழ் மக்களிடையே எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் அகத்தியர் தம்சீடர்களுக்கு நன்றாகவே அறிவுறுத்தி யிருக்கவேண்டும்..

பொதுவாகத் தமிழர்கள் புலால் உண்டபோதிலும் சைவத்திற்கே அதிக மதிப்புக் கொடுத்தார்கள், கொல்லாமை, புலால் உண்ணாமை, என்ற சிறந்த பழக்கங்கள் தமிழரிடை இருந்தன. தவிர தமிழ்க் குலப் பெண்டிர் கற்பு! நெறியில் சிறந்து விளங்கினர். இந்தப் பண்புகளை மதித்து நடக்கும்படி அகத்திய சீடர்கள் அறிவுறுத்தப் பட்டிருந்தனர்.

மேலும் தமிழ் மக்களுக்கு மருத்துவம் செய்தும், வேறுபல உதவிகளைப் புரிந்தும் சீடர்கள் ஒரு நல்ல எண்ணத்தை உண்டாக்கினர். வெள்ளைத் தோல் படைத்த ஆரியர்கள் மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் தமிழர்களிடையே ஏற்பட்டது. இந்த எண்ணம் தான் பிற்காலத்தில் ஆரியர்கள் பெரிய அளவு கூட்டம் கூட்டமாகத் தமிழ்நாட்டில் குடியேறவும் அரசர்களிடம் மான்யங்களாக நிலங்களைப் பெற்று வசதியோடு வாழவும் உதவியது. அதோடு நிற்கவில்லை. வெள்ளைத் தோல் படைத்த ஆரியர்கள் தங்களை விட மேலான குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதித் தமிழர்கள் அவர்களுக்கு மரியாதை செலுத்தவும் ஆரம்பித்து விட்டார்கள்.

வெள்ளையர்கள் இந்திய நாட்டில் குடியேறுவதற்கு முன்னர் பாதிரிகளையும் தவ மகளிரையும் (nuns) அனுப்பி மதப் பிரசாரம் செய்தும், பள்ளிக்கூடங்கள் கட்டியும் , மருத்துவ விடுதிகள் ஏற்படுத்தியும் ஆங்காங்கு வாழ்ந்த மனித சமுதாயங்கின் ஆதரவையும் அபிமானத்தையும் பெற்றார்கள் அல்லவா? அதே போன்ற நிகழ்ச்சிதான் இது.

காவிரி தோன்றும் குடகு மலையிலிருந்து புறப்பட்ட அகத்தியர் நேராகச் சுப்பிரமணியரிடம் சென்று தமிழ் கற்றுக் கொண்டார். மொழியை அறிந்தால் மட்டுமே மக்களிடம் கலந்து பழக முடியும். அவர்கள் அன்பைப் பெறுவும் முடியும் என்பதை அகத்தியர் நன்கு அறிந்திருந்தார். இதே முறையைத் தான் வீரமாமுனிவரும் கையாண்டார்.
அகத்தியர் வருவதற்கு முன் தமிழே இல்லை என்பது போலும் அவர்தான் தமிழை உண்டாக்கினர் என்பது போலும் கதைகள் கட்டிவிடப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை! முதற் சங்கத்தின் தலைவன் சிவன் அவனுக்குப் பின்தான் அகத்தியன்.

அகத்தியர் தெற்கு நோக்கி வருவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இருந்தது. அது தான் உண்மை?சுப்ரமணியர் அகத்தியருக்கு ஞானத்தை உபதேசித்தார். தமிழ் மொழியால் உபதேசித்தார் அதனால் அகத்தியர் சுப்பிரமணியரிடமிருந்து தமிழையும் ஞானத்தையும் கற்றுக் கொண்டார்.

அகத்தியரே கூறுகிறார்.

ஒண்ணாது இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன்
உத்தமனே புலஸ்தியரே சொல்லக்கேளும்
நண்ணமுடன் வடிவேலர் தம்மிடத்தில்
நாட்டமுடன் வெகுகாலம் அடுத்திருந்தேன்
கண்ணபிரான் பெற்றதுபோல் அடியேன் தானும்
காசினியி லுபதேசம் பெறவே வந்தேன்
வண்ணமுடன் நாதாந்த சித்து தாமும்
வணக்கமுடன் வேலவரைக் கேட்டார் தாமே

அகத்தியர் சுப்பிரமணியரை நெடுங்காலம் அடுத்திருந்ததாகக் கூறுகிறார். கண்ணபொருமான் உபதேசம் பெற்றதைப்போல் நானும் தங்கிடம் உபதேசம் பெறவே வந்தேன். எனக்கு உபதேசம் செய்தருளவேண்டும் என்று வணக்கத்துடன் கேட்டுக் கொண்டார்.

கேட்டவுன் அடியேன்மேல் மனதுவந்து
கேள்வியின் உத்தாரச் சொற்படிக்கி
நீட்டமுடன் ஞானோப தேசந் தன்னை
நெடுங்காலம் போதிப்பேன் என்று சொல்லி
வாட்டமுடன் வடிவேலர் சந்தோஷித்து
வாகுடனே கெத்தியர்க்கு வுபதேசங்கள்
கூட்டமுடன் நந்தீசர் முன்னதாக
கூறுவார் உபதேசம் கூறுவாரே.

சுப்பிரமணியர் மனம் மகிழ்ந்தவராக அகத்தியருக்கு நெடுங்காலம் உபதேசித்தார். எழுத்துக்கு முதல்வனாக விளங்கும்படியாக அவ்வளவு தெளிவாக உபதேசித்தார். சகலகலை ஞானங்களையும் உபதேசித்தார். நந்தீசரையும் அருகில் வைத்துக் கொண்டு உபதேசித்தார். அதனால் அகத்தியர் சகல கலைகளிலும் வல்லவராக உயர்ந்த ஞானவானாக விளங்கினர்.

அகத்தியரால் தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியக் கண்டம் முழுவதிலுமே ஒரு கலாச்சாரப் பிளயமே ஏற்பட்டது எனலாம். வடக்கும் தெற்கும் ஒன்றுடனொன்று கருத்துகளை பரிமாறிக் கொண்டு முன்னேறிய போதிலும், பிற்காலத்தில் ஆரியர்கள் சமஸ்கிருத மொழியே முதல் மொழி என்பது போலும் அதிலிருந்துதான் மற்ற எல்லாம் தோன்றின என்பது போலும் எழுதி வைத்துக் கொண்டார்கள். ஆரிய இனம் மேலினமாக ஒப்புக் கொள்ளப்பட்டதால் அது எளிதாக முடிந்தது. ஆயினும் இந்திய நாடு முழுவதிலும் ஆரிய தமிழ் இனங்களிடையே சமரச மனப்பான்மையும் இணைந்து வாழும் பண்பும் ஏற்பட்டன. மொத்தத்தில் ஒரு கலாச்சாரப் பிரளயத்துக்கு இது வழி கோலியது எனலாம்.

1 Comment »

The URI to TrackBack this entry is: http://velu.blogsome.com/2006/02/05/thamilaka-varalaru/trackback/

  1. Nice One. Can we get lopamuthra picture please?

    Comment by Menakai — August 6, 2006 @ 4:05 pm

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>


New Page 2